» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை கடலோர காவல் படை பத்திரமாக மீட்பு!
வெள்ளி 16, மே 2025 12:16:43 PM (IST)

வங்கக்கடலில் சரக்கு கப்பல் ழூழ்கி விபத்துக்குள்ளானதில், நடுக்கடலில் தத்தளித்த 6 மாலுமிகளையும் பத்திரமாக கடலோர காவல் படையினர் மீட்டனர்.
கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தில் இருந்து சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த 12ம் தேதி லட்சத்தீவுக்கு சரக்கு கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். கப்பல் கடந்த 14ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கப்பல் விபத்துக்குள்ளானது.
பலத்த காற்றும் மற்றும் அலையில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கப்பலில் இருந்த சிறிய ரக படகில் ஏறி உயிர் தப்பினர். ஆனால், சரக்கு கப்பல் மூழ்கியது. படகில் ஏறிய மாலுமிகள் அனைவரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு கப்பலில் பயணித்தவர்கள் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தத்தளித்த 6 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் மங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழாரம்..!
திங்கள் 23, ஜூன் 2025 5:03:00 PM (IST)

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு!
திங்கள் 23, ஜூன் 2025 12:21:25 PM (IST)

ஆமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு: ஏா் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 11:47:26 AM (IST)

யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: பிரதமர் மோடி பேச்சு
சனி 21, ஜூன் 2025 10:17:28 AM (IST)

கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும்: அமித்ஷா பேச்சு
வெள்ளி 20, ஜூன் 2025 10:24:48 AM (IST)
