» செய்திகள் » இந்தியா

Share

காங்கிரஸ், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: சந்திரசேகரராவ் வலியுறுத்தல்!

புதன் 10, மார்ச் 2010 11:43:26 AM (IST)

தனித் தெலுங்கான கோரி்க்கையை வலியுறுத்தி காங்கிரஸ், தெலுங்கு தேச எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் 2 மாதத் திற்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் ஆந்திராவில் பதட்டம் ஏற்பட்டது. மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தனி மாநிலம் பற்றி ஆராய மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது.

இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சாய்குமார் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்தார். இதனால் ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானாவுக்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ்-தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக மறுத்து வருகிறார்கள். அவர்களும் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads