» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ககன்யான் திட்டம் வலுப்பெற சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வு பணி உதவும்: பிரதமர் மோடி உரை
ஞாயிறு 19, ஜனவரி 2025 8:37:49 PM (IST)
இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளி நிலையங்கள் அமைப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு சென்னை ஐ.ஐ.டி.யின் ஆய்வு பணி உதவும் என்று பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசும்போது, சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையத்தின் பணிகளை பற்றி பாராட்டி பேசினார். அவர் பேசும்போது, விண்வெளியில் உற்பத்திக்காக, புதிய தொழில் நுட்பங்களை பற்றி சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையம் பணியாற்றி வருகிறது.
இந்த மையம், 3டி பதிக்கப்பட்ட கட்டிடங்கள், உலோக நுரைகள் மற்றும் ஆப்டிகல் பைபர்கள் போன்ற தொழில் நுட்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறது. நீரின்றி கான்கிரீட் உற்பத்தி செய்வது போன்ற புரட்சிகர வழிமுறைகளை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியானது, இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளி நிலையங்கள் அமைப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும் என்று அவர் பேசியுள்ளார்.
நம்முடைய நாட்டில் கடந்த 2 மாதங்களில், 2 புதிய புலிகள் காப்பகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று சத்தீஷ்காரில் உள்ள குரு காசிதாஸ் - தமோர் பிங்லா புலிகள் காப்பகம். 2-வது, மத்திய பிரதேசத்தில் ரதபானி புலிகள் காப்பகம் ஆகும் என கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இனியாவது மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:24:49 PM (IST)

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)

திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம்: 4 பேர் கைது!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:12:19 AM (IST)

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து
சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகம்!
சனி 8, பிப்ரவரி 2025 12:31:40 PM (IST)

மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு!
சனி 8, பிப்ரவரி 2025 10:24:50 AM (IST)
