» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.87 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்!
வெள்ளி 1, நவம்பர் 2024 5:36:59 PM (IST)
அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. 8வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் 1.72 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கை மற்றும் வரி வசூல் முறை சிறப்பாக செயல்படுவதை வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி: 236 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பு
சனி 15, நவம்பர் 2025 12:19:55 PM (IST)

ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது : காங்கிரஸ் அறிக்கை!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:52:00 PM (IST)

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு!
வெள்ளி 14, நவம்பர் 2025 11:08:06 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 5:34:27 PM (IST)

கோவளம் கடற்கரைக்கு 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்!
புதன் 12, நவம்பர் 2025 12:25:27 PM (IST)








