» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தாயை கொடூரமாக கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு தூக்குதண்டனை!
வியாழன் 3, அக்டோபர் 2024 8:51:08 AM (IST)
தாயை கொடூரமாக கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மகட்வாலா வாசகத் பகுதியை சேர்ந்தவர் எல்லம்மா(63). இவரது மகன் சுனில் ராமா(38). இவர் சம்பவத்தன்று தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். எல்லம்மா பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் ராமா, தாய் எல்லம்மாவை கொடூரமான முறையில் கொலை செய்தார்.
பின்னர் அவர் மிருகத்தை விட கொடூரமாக மாறி தாயின் உடலை வெட்டி, பாகங்களை சமைத்து சாப்பிட்டார். 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி மதியம் நடைபெற்ற இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் ராமாவை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்டு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தாயை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சுனில் ராமாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு கூறியது.
இந்த தண்டனையை எதிர்த்து சுனில் ராமா மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல மாநில அரசும் அவருக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, பிரித்விராஜ் சவான் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சுனில் ராமாவுக்கு கோலாப்பூர் செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "சுனில் ராமாவுக்கு நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம். குற்றவாளி தாயை கொலை மட்டும் செய்யவில்லை. அவரது உடல் உறுப்புகளான மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை அகற்றி, அவற்றை ஒரு பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு உள்ளார்.
மேலும் அவரது இருதயத்தை சமையல் செய்து சாப்பிட இருந்து உள்ளார். ஆகவே இது நரமாமிச வழக்கு. எனவே இதை அரிதிலும், அரிதான வழக்காக கூற முடியும். இந்த கொடூரமான கொலை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. நரமாமிசம் சாப்பிட்டவர் திருந்த வாய்ப்பில்லை. இது ஒரு தாயின் மிக கொடூரமான கொலை" என கூறியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1739270422.jpg)
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:11:04 PM (IST)

இனியாவது மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:24:49 PM (IST)

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)

திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம்: 4 பேர் கைது!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:12:19 AM (IST)

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து
சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகம்!
சனி 8, பிப்ரவரி 2025 12:31:40 PM (IST)
