» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு: மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
செவ்வாய் 23, ஜூலை 2024 12:36:55 PM (IST)
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறையும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
2024- 25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- அனைத்து வகை முதலீடுகளுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அறக்கட்டளைக்கு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்படும்.
- குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய கால மூலதன ஆதாய வரி.
- வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிக் குறைபு. இதுவரை 40 சதவீதமாக இருந்த வரி இனி 34 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
- ஆன்லைன் வர்த்தகத்துக்கான வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
- டிடிஎஸ் தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமாகக் கருதப்படாது.
- தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறையும்.
- பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைப்பு.
- புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மேலும் மூன்று மருந்துகளின் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- மருத்துவ உபகரணங்கள் மற்றம் சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும்.
- 2024 பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
- வாராக்கடனை வசூலிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்
- நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறு அணுமின் நிலையங்கள் உருவாக்கப்படும்.
- காசி விஸ்வநாதர் கோயில், உலகத்தரத்தில மேம்படுத்தப்படும்.
- வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.
- தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
- குறு, சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
- தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் உருவாக்கப்படும்.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
- மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில்துறையினருடன் இணைந்து பெண்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசுத் தரப்பில் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
- உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.
- மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும்.
- 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்.
- இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
- ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- உற்பத்தி துறையில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
- சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
- முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 10:24:37 AM (IST)

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:25:39 PM (IST)

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:26:16 AM (IST)

பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:27:44 PM (IST)

பஹல்காம் தாக்குதல் : உளவுத்துறை தோல்விகள் குறித்து ஆய்வு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:33:36 PM (IST)

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:42:42 PM (IST)
