» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியா வளர்ந்த நாடாக மாறும்:‍ பிரதமர் மோடி பேச்சு

சனி 25, மார்ச் 2023 5:15:21 PM (IST)

அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடைபெற்ற ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, நிறுவனத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து பேசிய அவர், ''நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது அமிர்த மகோத்சவ காலத்தில் உள்ளது. வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் நாடு உறுதியாக உள்ளது.

குறுகிய காலத்தில் நாடு எவ்வாறு வளர்ச்சி பெற்ற நாடாக மாற முடியும் என்று மக்கள் பலரும் கேள்வி கேட்கிறார்கள். நிறைய சவால்கள் இருக்கின்றன. நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அப்படி இருக்கும்போது குறுகிய காலத்தில் இந்தியா எவ்வாறு வளர்ந்த நாடாக மாற முடியும் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. இதற்கு எனது பதில், நாட்டு மக்கள் அனைவரின் முயற்சி காரணமாக இது நிகழும் என்பதுதான்.

நாட்டின் சுகாதாரத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு பணிகள் நேர்மையாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மருத்துவக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன'' எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆனந்தன்Mar 25, 2023 - 10:29:25 PM | Posted IP 162.1*****

நாட்டைத்தான் விற்றுவிட்டாயே பின்னர் என்ன வளரும் மயிர்தான் வளரும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory