» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரில் குண்டு வெடித்தபோதும் ராகுல் யாத்திரை தொடரும் : காங்கிரஸ் அறிவிப்பு

சனி 21, ஜனவரி 2023 4:45:07 PM (IST)

காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்தபோதும், ராகுல்  காந்தியின் ஒற்றுமை யாத்திரை தொடரும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை, கடந்த 18-ந்தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். இதற்கு கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டார். உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கேட்டு கொண்டார்.

இந்த சூழலில், காஷ்மீரில் இரட்டை குண்டுவெடிப்பு நடந்ததுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, காஷ்மீர் துணை நிலை கவர்னரை நான் சந்தித்து பேசினேன். காஷ்மீரில் உள்ள எங்களுடைய அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது என்பது அவர்களுடைய பொறுப்பு. என்ன நடந்தபோதும், இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory