» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 7, டிசம்பர் 2022 10:16:58 AM (IST)
சபரிமலை கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அறிவித்தது. இதனை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை செய்தது. மேலும் அந்த தனியார் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது கேரள ஐகோர்ட்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும். கோவிலில் அனைவரும் ஒன்றே. எனவே இக்கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்தது.
சபரிமலை கோவிலுக்கு இம்முறை மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. எரிமேலி, வண்டிபெரியார் மற்றும் சத்திரம் வழியாக பக்தர்கள் சன்னிதானம் செல்கிறார்கள். நேற்று வரை இந்த பாதை வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் இதற்காக பக்தர்களுக்கு இந்த பாதையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் 'கிளினிக்' நடத்த தடை: மாநில அரசுக்கு பரிந்துரை!
சனி 4, பிப்ரவரி 2023 5:28:29 PM (IST)

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
சனி 4, பிப்ரவரி 2023 3:47:20 PM (IST)

கர்நாடக தேர்தல்: பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!
சனி 4, பிப்ரவரி 2023 12:37:49 PM (IST)

உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சனி 4, பிப்ரவரி 2023 11:54:11 AM (IST)

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை : பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 10:22:17 AM (IST)
_1675421098.jpg)
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:15:04 PM (IST)
