» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி மரியாதை
செவ்வாய் 6, டிசம்பர் 2022 10:37:52 AM (IST)
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்படுகிறது.
அம்பேத்கரின் நினைவு நாள் முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.