» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி மரியாதை

செவ்வாய் 6, டிசம்பர் 2022 10:37:52 AM (IST)



சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தை ஒட்டி  குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்படுகிறது. 

அம்பேத்கரின் நினைவு நாள் முன்னிட்டு  டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory