» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கு விசாரணை செப்.,27 முதல் நேரடி ஒளிபரப்பு

வெள்ளி 23, செப்டம்பர் 2022 11:46:20 AM (IST)

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகள், செப்., 27 முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. 

உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார். 

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, செப்., 27 முதல் யு டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory