» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

படேல் பாதையை பின்பற்றி உழைக்க வேண்டும் : பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 12:13:23 PM (IST)

சர்தார் வல்லபாய் படேல் பாதையை பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

குஜராத்தில் பாஜக மேயர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மேயர்களுடன் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேல் மேயராகதான் தனது பயணத்தை தொடங்கினார். சிறந்த இந்தியாவுக்கான அவரது பாதையை நாம் பின்பற்றி, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களும் இப்போது பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகின்றன. அந்த பகுதிகளில் தொழில் கட்டமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு விற்பனையாளர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெறுவதை மேயர்கள் உறுதி செய்ய வேண்டும். 2014ஆம் ஆண்டில் 250 கிலோ மீட்டருக்கு குறைவாக போடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பாதைகள் தற்போது 775 கிலோ மீட்டருக்கு அதிகமாக போடப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜக மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் பங்கேற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory