» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாயை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் : டாக்டர் மீது வழக்குப் பதிவு

திங்கள் 19, செப்டம்பர் 2022 4:34:23 PM (IST)

ராஜஸ்தானில் நாயை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற டாக்டர் மீது விலங்கு வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய், காரின் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் அந்த காரை மறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். இதன்பின்பு காயமடைந்து இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்று உள்ளனர்.

ரஜ்னீஷ் கால்வா என்ற அந்த மருத்துவர் போலீசை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார். தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த முயற்சித்தேன் என அவர் கூறியுள்ளார். எனினும், அந்த நகரின் நாய் இல்லத்திற்கான தொண்டு அமைப்பு ஒன்று விலங்குவதை சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory