» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுதந்திர தின விழா : அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:47:22 PM (IST)
சுதந்திர தின விழாவில் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது..
நாட்டில் கரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்போர் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், இந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, சுதந்திர தினத்தன்று, மிகப்பெரிய அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.