» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது : ராகுல் காந்தி பேச்சு!
திங்கள் 16, மே 2022 10:46:41 AM (IST)
மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இதனை சீர்செய்ய கட்சி சார்பில் நாடு முழுவதும் அக்டோபர் முதல் பாதயாத்திரைகள் நடைபெறும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று ராகுல் காந்தி பேசியதாவது: மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாஜக மக்களுடன் நல்ல தொடர்பில் உள்ளது. அவர்களிடம் அதிக பணம் உள்ளது, நாம் மக்களுடனான தொடர்பை சீர்படுத்த வேண்டும். இந்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் மாதம் முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொள்ளும். மக்களும் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த குறுக்குவழி ஏதும் இல்லை. மூத்த தலைவர்கள், இளையவர்கள் என அனைவரும் மக்களைச்சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை முதன்மையான தேசிய அளவிலான எதிர்க்கட்சியாக வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியைப்போல் மாநிலக் கட்சிகளால் பாஜகவுக்கு எதிராக போராட முடியாது. வெறுப்பு மற்றும் வன்முறை கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் பற்றிதான் பாஜக பேசுகிறது. மாநில கட்சிகளை பற்றி பேசாது. ஏனென்றால், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை மாநில கட்சிகளுக்கு இல்லாததால், அவற்றால் தங்களை வீழத்த முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்.
நாட்டில் உள்ள முக்கியமான அதிகாரஅமைப்புகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் ஊடுருவிவிட்டது. நீதித்துறை தவறாக வழிநடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் கைகள் முடக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல், மிரட்டல் மூலம் ஊடகங்கள்அமைதியாக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினரின் குரல்வளையை நெரிக்க, இஸ்ரேல் ராணுவ தயாரிப்பான ‘பெகாசஸ்’ என்ற உளவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஆனால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி உணரவைப்பது நமது பொறுப்பு. வெறுப்புஅரசியல் மூலம் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர். இது நாட்டுக்கு எந்தவிதத்திலும் பலன் அளிக்காது. இவ்வாறு ராகுல் பேசினார். அடுத்து நடக்கவுள்ள சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த ‘நவ் சங்கல்ப்’ என்ற செயல் திட்டம் நேற்று உருவாக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு ஜூலை 1 முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு
புதன் 29, ஜூன் 2022 8:23:55 AM (IST)

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்!
செவ்வாய் 28, ஜூன் 2022 5:47:50 PM (IST)

மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; 12 பேர் மீட்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 11:05:28 AM (IST)

குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
செவ்வாய் 28, ஜூன் 2022 8:43:32 AM (IST)

ஜெர்மனியில் மோடி பேசிய தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்
திங்கள் 27, ஜூன் 2022 5:25:42 PM (IST)

கர்நாடகாவில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து : 9 பேர் உயிரிழப்பு -10பேர் படுகாயம்!
திங்கள் 27, ஜூன் 2022 11:55:49 AM (IST)
