» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தர பிரதேசம் மாறிவருகிறது: காங்கிரஸ் விமர்சனம்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 9:44:58 AM (IST)
பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக உத்தரபிரதேச மாநிலம் மாறிக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி, மாநில பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. மாநில பாஜக அரசுதான் உன்னாவ் வழக்குக்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டும்’’ ‘‘இந்த விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். நாட்டில், உத்தரபிரதேச மாநிலம், பாலியல் பலாத்காரத்தின் தலைநகராக மாறிக்கொண்டிருக்கிறது. மாநில அரசு விழித்தெழவேண்டும்” என்று சுப்ரியா ஷிரினாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து: 5 பேர் பலி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:19:12 AM (IST)

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 3:31:36 PM (IST)

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
வியாழன் 21, ஜனவரி 2021 11:49:23 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)
