» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை
சனி 7, டிசம்பர் 2019 12:16:27 PM (IST)
நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டையும், புதிய பாஸ்போர்ட் வேண்டி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து நித்தியானந்தாவின் முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். எனவே, குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார், நித்தியானந்தாவை தேடி வந்தனர். நித்யானந்தா மற்றும் அவரது ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குஜராத் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்கி அதை கைலாசா எனும் தனி நாடாக நித்தியானந்தா பிரகடனப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவ்வப்போது நித்தியானந்தா வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நித்தியானந்தா தங்கள் நாட்டின் தீவு எதையும் வாங்கவில்லை என்றும், அவர் ஹைதி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் ஈகுவடார் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் நித்தியானந்தா தன்னை அகதியாக ஏற்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் அரசு மறுத்து விட்டதாகவும் அந்நாட்டு தூதரகம் கூறியுள்ளது. இனி நித்தியானந்தா தொடர்பான செய்திகளில் ஈகுவேடார் நாட்டை எந்த ஊடகமும் குறிப்பிடக்கூடாது என ஈகுவேடார் அரசு சார்பில் வலியுறுத்தியுள்ளதப்பட்டுள்ளது.
இந்நிலையில், நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டையும், புதிய பாஸ்போர்ட் வேண்டி தாக்கல் செய்த விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை வெளிநாட்டு தூதரகங்களின் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது என ரவீஷ் குமார் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து: 5 பேர் பலி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:19:12 AM (IST)

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)

பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 3:31:36 PM (IST)

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
வியாழன் 21, ஜனவரி 2021 11:49:23 AM (IST)

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை
புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)
